ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ள முடிவு! செய்திகளின் தொகுப்பு(Video)
உள்ளாட்சிசபைத் தேர்தலில் பொதுக்கூட்டணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஊடக சந்திப்பு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும். அவ்வாறு அமையும் கூட்டணிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தலைமை வகிக்கும்.
அதாவது எமது மொட்டு சின்னத்தின்கீழ் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் மாற்று கட்சிகளின் சின்னத்தின்கீழ் மொட்டு கட்சி போட்டியிடக்கூடும்.
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
