மீனவர்களின் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டும்: என்.இன்பநாயகம்
குறுகிய நோக்கங்களுக்காகக் வாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (16.02.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இழுவைப்படகுகள் வடபகுதி கடற் பிரதேசத்திலே மீன்பிடிப்பதற்கான பாஸ் அனுமதி வழங்கவுள்ளதாக வெளியாகத் தகவலை தொடர்ந்தே என்.இன்பநாயகம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வாதாரம்
மேலும் அவர் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தைக் கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு - கிழக்கு மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும்.
தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam