இலங்கையர்கள் பெற்றுள்ள கடன் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குடும்ப கணக்கெடுப்பு (2023) அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, அடமானக் கடன்களின் விகிதம் 31 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கி கடன்
நாட்டில் 22.3 வீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 21.9 வீதமும், சமுர்த்தி வங்கிகளிடமிருந்து 7.1 வீதமும், கடன் வழங்குபவர்களிடமிருந்து 9.7 வீதமும், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடமிருந்து 8.7 வீதமும் மக்கள் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குடும்ப அலகுகளில் கடன் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண அழுத்தம் ஆகியவை நலனையும் பாதிக்கின்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
