மாநகரசபையின் 52வது அமர்வில் காரசாரமான விவாதங்கள்

Batticaloa Municipal Council T. Saravanapavan Vasanthakumar
By Kumar Oct 22, 2021 01:14 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபையின் 52வது அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சபை வெளிநடப்பு செய்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் (T.Saravanapavan) தலைமையில் ஆரம்பமானது.

முதல்வரின் தலைமையுரையுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இதன்போது நெதர்லாந்து தூதரகத்திடம் மாநகர முதல்வரினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு விளக்கமளித்ததுடன் தம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை சிலர் தங்களது வேலைத்திட்டங்களாக காட்டமுற்படுவதாக இங்கு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள தகன நிலையம் மற்றும் கலாசார மண்டபம், வரவேற்பு வளைவு ஆகியன 200 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான திட்டங்களை மாநகரசபையின் வேலைத்திட்டத்தில் தாமதங்கள் இருப்பதன் காரணமாக கட்டிடங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அதனை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் கட்டிடங்கள் திணைக்களத்தின் பொறியியலாளருக்கு தொலைபேசி ஊடாக ஆணையாளர் அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தகன நிலையம் இந்த மாநகரசபையின் அவசரமான தேவைப்படுவதன் காரணமாக நிதிக்குழுவில் அனுமதி பெற்று மாநகர முதல்வரின் முன் அனுமதியுடன் கேள்விப்பத்திரம் கோரப்பட்டது.

ஆனால் மாநகரசபை உறுப்பினர் வசந்திகுமார் அவர்களின் கடிதத்தலைப்பில் கடிதம் எழுதப்பட்டு இந்த தகனசாலையினை அமைக்கவேண்டாம் என உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான வேலைத்திட்டங்கள் செய்தாலும் அதனை தடுப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர் சசிரூபன் தான் அக்கடிதத்தில் கையெழுத்திடாத போதிலும் மோசடியாக தனது கையெழுத்தினை மாநகரசபை உறுப்பினர் வசந்தகுமார் (Vasanthakumar) கடிதத்தில் இணைத்துள்ளதாக ஒழுங்குப்பிரச்சினையை கொண்டுவந்தார்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர் செல்வி கௌரியும் தாங்கள் தகன நிலையம் தேவையில்லையென கையெழுத்திடவில்லையென தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் சட்டத்தினை மீறிய வகையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே அது தொடர்பில் கடிதம் எழுதியதாகவும் தகன நிலையம் வேண்டாம் என்று கடிதம் எழுதவில்லையெனவும் உறுப்பினர் வசந்தகுமார் விளக்கமளித்த நிலையில் கையெழுத்துகள் போலியாக சேர்க்கப்பட்டதாக கூறி கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது வசந்தகுமார் இரண்டு சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான தடையினை கொண்டுவரும் வகையில் அடுத்த சபை அமர்வில் தான் தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக மாநகரசபை முதல்வர் அறிவித்த நிலையில் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது போலி கையெழுத்து தொடர்பான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் மாநகரசபை உறுப்பினர் வசந்தகுமார் சபை அமர்வில் வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து வெளியேறிச்சென்றுள்ளார்.

இன்றைய சபை அமர்வின் போது மட்டக்களப்பின் மின்தகனசாலை அமைப்பதற்காக தனது மாநகரசபையின் இம்மாத கொடுப்பனவினை சபைக்கு வழங்குவதாக மாநகரசபை உறுப்பினர் து.மதன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றைய சபை அமர்வின் போது மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான சபையின் அனுமதிபெற்றப்பட்டதுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US