இலங்கையில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி: நாடாளுமன்றில் விவாதம்
நாட்டில் ஏற்பட்டுள்ள உரம் தொடர்பிலான சிக்கல்கள் குறித்து இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்றும், நாளையும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உரம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன் இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. இளம் குற்றவாளிகளுக்கான 18க்கும் குறைந்த வயதெல்லையானது, 18 முதல் 22 வயது வரை எனத் திருத்தப்படவுள்ளது.