தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி: லொஹான் ரத்வத்த குறித்து வெளியான அறிக்கை

Ali Sabry Gotabaya Rajapaksa Lohan Ratwatte Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Sheron Jun 12, 2023 09:46 PM GMT
Report

கோட்டாபய ஆட்சிக் காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சித்தமை ஒன்றரை வருடங்களின் பின்னர் அம்பலமாகியுள்ளது.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அந்த நேரத்தில் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஆராய்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியினால் ஒரு வருடம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிபதி ஒருவரை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு நபர் விசாரணைக் குழு அறிக்கையை அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரியிடம் (24.11.2023) அன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் நகல், இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத மற்றும் அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி, சமூக மற்றும் அமைதி நிலையம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தற்போதைய நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம். அலிப்பினால் ஒரு வருடம் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி: லொஹான் ரத்வத்த குறித்து வெளியான அறிக்கை | Death Threats To Tamil Prisoners Lohan Ratwatte

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி முழந்தாளிட வைத்தமை, இருவரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலை செய்ய முயற்சித்தமை, இனங்களுக்கிடையில் வெறுப்பு மற்றும் பகைமை உணர்வுகளை ஊக்குவித்தமை மற்றும் அதிகாரங்களை மீறியமை ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள், தண்டனை சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சரோஜனி குசலா வீரவர்தன தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

மதியரசன் சுலக்சன் மற்றும் பூபாலசிங்கம் சூரியபாலன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளின் கொலை முயற்சி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட ஏனைய அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பிலான 'பி' அறிக்கையை அநுராதபுரம் நீதவானிடம் சமர்ப்பித்து பொலிஸ் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்குமாறு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்த இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் சவால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி: லொஹான் ரத்வத்த குறித்து வெளியான அறிக்கை | Death Threats To Tamil Prisoners Lohan Ratwatte

விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேவேளை ரத்வத்த இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்.

கடந்த அரசாங்கத்திலும், இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்த/வகிக்கும் அலி சப்ரியோ, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களமோ சிறைச்சாலைக்குள் நுழைந்து தண்டனைக்குரிய குற்றத்தை இழைத்த இரண்டு அராசாங்கங்களினதும் உறுப்பினருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

2021 டிசம்பரில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அமைச்சரவையின் அனுமதியின்றி இதனை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 5.12.2001, இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, கண்டி - உடத்தலவின்ன பத்து முஸ்லிம் இளைஞர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரத்வத்த, பிஜியின் ரக்பி பயிற்சியாளரான ஜோயல் ப்ர்ராவை சுட்சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதோடு, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் மூத்த புதல்வரும் ஆவார். இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

420 கோடி அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தனியார் நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சானுக ரத்வத்த, இவரது இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US