அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.
மேலும், பாதாள உலகத்தையும்,போதைப் பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை
இதன் காரணமாகவே அமைச்சருக்கு பாதாள உலக கும்பல்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை பாதாள உலக அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படாது என அமைச்சர் திரான் அலஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri