பிக்குக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ராஜாங்க அமைச்சரின் சகோதரர்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் சகோதரர் எனக் கூறப்படும் நபர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சிங்களே அமைப்பின் பொதுச்செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இணைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்று காரணமாக இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ராஜாங்க அமைச்சரின் நடத்தையை புரிந்துக்கொள்ள முடியும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பஞ்ஞாலோக்க தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.