பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கான காரணம் என்ன....! வெளியான ஆய்வு முடிவு
சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது கோளான வெள்ளி கோள் நமது பூமிக்கு அருகில் உள்ள கோள் ஆகும்.இந்த கோள் பூமியின் சகோதரி என்று சொல்லப்படுகின்றது.
வெள்ளி கோளின் அளவு, ஈர்ப்பு விசை, உள்ளடக்கம் ஆகியவை பூமியை போன்று இருப்பதால் பூமியின் சகோதரி என்று அழைக்கபடுகிறது. ஆனாலும் பூமி கோளுக்கும் வெள்ளி கோளுக்கும் பல வேறுபாடுகளும் உள்ளன.
வெளியான ஆய்வு முடிவு
எனினும், காலப்போக்கில் அவை மாறி அமில சுற்று சூழலை கொண்டுள்ளது.இந்தளவு வெள்ளி மாறியதற்கான காரணத்தை விஞ்ஞானிகs் வெளியிட்டுள்ளனர்.
அதிக குளிர், வெப்பத்துடன் அல்து தட்பவெப்பத்துடன், ஈரப்பதம் கொண்டிருந்த அந்த கிரகம் அமிலத்தன்மை கொண்ட அதிக வெப்பம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளமை குறித்து புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட தொடர் எரிமலை வெடிப்பு செயல்களே இதற்கான காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.