முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புத்திக குருகுலரத்ன தனது 78வது வயதில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்னே மலர்சாலையில் நாளை (10) காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இறுதிக்கிரியைகள் நாளை மாலை 3.30 இக்கு பொரளை மயானத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 19, 1943 இல் பிறந்த அவர், அம்பலங்கொட தர்மசோகா வித்யாலயத்தின் பழைய மாணவராவார்.
புத்திக குருகுலரத்ன ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1989 இல் நாடாளுமன்றம் பிரவேசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.