திருகோணமலையில் யானை தாக்குதலில் ஒருவர் பலி
திருகோணமலை - 10 ஆம் கட்டை கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில்
சடலமொன்று இன்று (12.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளது.
வெல்கம் விகாரை பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வயலுக்குச் சென்ற போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதன்போது திருகோணமலை - அனுராதபுரம் வீதி - வெல்கம் விகாரை பகுதியைச் சேர்ந்த மாதர ஆராச்சி விதானகே ஹரிச்சந்ர (53 வயது) நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது வைத்தியசாலை
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள் : பதுர்தீன் சியானா

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
