கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தவறுதலாக அதிகளவு காபனீரொட்சைட் வழங்கப்பட்டமையால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - நுகேகொடை பகுதியில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு, மார்பக அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக செய்யப்பட்டு, அதன் பின்னர் ஒட்சிசன் வழங்கப்படுவதற்கு பதிலாக அதிகளவு காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு சேவையில் குறைபாடு
இந்த சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதா அல்லது ஒட்சிசன் சிலிண்டர் மாசடைந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வைத்தியசாலையின் பராமரிப்பு சேவையில் உள்ள குறைபாட்டையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
