கம்பஹா பொது வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து ஒவ்வாமை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பி தற்காலிகமாக இடைநிறுத்தம்
இந்த சம்பவத்தின் பின்னர் நோய் எதிர்ப்பு மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் முடிவுகளின் படி, இரு நோயாளிகள் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்த கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam