அம்பாறையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (26.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர் குணவர்தன (73734) அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற வியாபாரி ஒருவர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு தோட்டலக பகுதியிலிருந்து ஹெரோயின் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 2,677 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை நகரின் மிஹிதுபுர, நவகம்புர, கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.