இலங்கை மின்சார சபைக்கு காலக்கெடுவை நிர்ணயித்துள்ள ஆணைக்குழு
இலங்கை மின்சார சபை, 2024 டிசம்பர் 6ஆம் திகதிக்குள் தனது கட்டண முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் மொத்த வழங்கல் பரிவர்த்தனை செயற்பாட்டு வழிகாட்டுதல்களின் கட்டண திருத்தப் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய சமர்ப்பிப்புக்கான காலக்கெடுவை டிசம்பர் 6 என நிர்ணயித்து, இரண்டு வார கால அவகாசத்தை மின்சாரசபைக்கு வழங்கியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கால அவகாசம்
முன்னதாக, தமது கட்டண முன்மொழிவை தற்போதைக்கு தரமுடியாது என்று கூறி, மின்சார சபை, எதிர்வரும் ஜனவரி வரையில் கால அவகாசத்தை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam