கொத்துரொட்டிக்குள் புழு! குருநாகல் ஹோட்டலில் சம்பவம்
குருநாகல் நகரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் கொத்து ரொட்டிக்குள் இருந்து இறந்து கிடந்த புழுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் கொழும்பு வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 18ம் திகதி கொத்து ரொட்டியொன்றை உட்கொள்ளச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
இறந்து கிடந்த புழு
கொத்து ரொட்டியை உட்கொள்ளும் போது அதற்குள் இருந்து இரண்டு அங்குலம் நீளமான புழுவொன்று இறந்த நிலையில் கிடப்பது அவரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வினவியபோது அவர்கள் மௌனம் காத்துள்ளனர்.
உரிய சோதனை
இந்நிலையில் குருநாகல் நகரின் உணவகங்கள் தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாகவே இவ்வாறான அசுத்தமான உணவு வகைகள் அங்கு பரிமாறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
