யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று (28.01.2024) காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
சட்டவிரோதம்
எனினும், கடலின் சீற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும். ஆமைகளை பிடிப்பதும் இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதமாகக் காணப்படுகின்றது
இதனால். கரையொதுங்கிய ஆமைகள் கைவிடப்பட்ட நிலையிலும் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri