யாழில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் சடலமாக மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த நபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் (05.01.2022) மீட்கப்பட்டுள்ளது.
மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை
சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபரின் மனைவி கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில்
உயிரிழந்ததையடுத்து, அவர் தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



