அநுராதபுரத்தில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஹொரவ்பொத்தான - கம்மெத்த கம்மானய பகுதியைச் சேர்ந்த ரன்ஹாமிகே வணிகசேகர (62 வயது) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் இக்குளத்தில் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், சில நேரங்களில் மது அருந்துவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இவருடைய மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam