மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதல்
கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டு பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது.
இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் காட்டு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்
பிரிவில் தொடர்ச்சியான மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
