குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்று திரும்பிய தயாசிறி!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். எனினும், விசாரணையின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள், சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை பெற்றமை தொடர்பான வாக்குமூலத்துக்காகவே,அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னிப்பு
இதேவேளை வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாய்களுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜெயசேகர கூறியுள்ளார்.

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
