மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த தயாசிறி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena)இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே தயாசிறி ஜயசேகர இதனை மறுத்துள்ளதாக தெவிரிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவி
பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் அவர் மீதான குற்றப்பத்திரிக்கையானது மீளப் பெறப்படும் என கூறப்பட்ட போதிலும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மானந்த மித்ரஷபால (Dushmantha Mithrapala) செயற்படுவதால் தயாசிறிக்கு அந்த பதவியை வழங்குவதில் சாத்தியமில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam