மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த தயாசிறி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena)இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே தயாசிறி ஜயசேகர இதனை மறுத்துள்ளதாக தெவிரிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவி
பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் அவர் மீதான குற்றப்பத்திரிக்கையானது மீளப் பெறப்படும் என கூறப்பட்ட போதிலும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மானந்த மித்ரஷபால (Dushmantha Mithrapala) செயற்படுவதால் தயாசிறிக்கு அந்த பதவியை வழங்குவதில் சாத்தியமில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan