திருகோணமலையில் பல உயிர்களை காவு கொண்ட விபத்து! முடங்கிய சில பகுதிகள்
திருகோணமலை - கிண்ணியா, குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தில் மரணித்த உறவுகளுக்காக துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிண்ணியாவின் பல பகுதிகளில் இன்று வெள்ளைக்கொடிகளைக் காணக்கூடியதாக உள்ளது எனவும், சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டு அப்பகுதிகள் முடங்கியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டு அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
