தாய் கழுத்தறுத்துப் படுகொலை: சந்தேகத்தின் பேரில் மகள் கைது

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Death
By Rakesh Dec 16, 2023 10:46 AM GMT
Report

தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகள் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கஹவத்தை - வெள்ளந்துறையில் கடந்த 13ஆம் திகதி, வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய மகள் இன்று (16.12.2023) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுமுறிப்பு குளத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் (Photos)

புதுமுறிப்பு குளத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் (Photos)

கழுத்தறுத்துக் கொலை

38 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார், இவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார்.

தாய் கழுத்தறுத்துப் படுகொலை: சந்தேகத்தின் பேரில் மகள் கைது | Daughter Kill Mother Kahavata

உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தறுத்துக் கொலை செய்து சில மணித்தியாலங்களின் பின்னர் சடலத்தை வீட்டின் பின்னால் கொண்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து கடைத்தொகுதியை உடைத்த பொலிஸ் ஜீப் வாகனம்

கட்டுப்பாட்டை இழந்து கடைத்தொகுதியை உடைத்த பொலிஸ் ஜீப் வாகனம்

பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பு

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக்கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக் கழுவி அவர் சுத்தம் செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலையைச் செய்து விட்டு, முற்பகல் 11.40 மணிக்கு தனது பணியிடத்துக்குச் சென்ற சந்தேகநபர், மாலை 3.40 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் கழுத்தறுத்துப் படுகொலை: சந்தேகத்தின் பேரில் மகள் கைது | Daughter Kill Mother Kahavata

அதன்பின்னர் சந்தேகநபர் கஹவத்தை பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தாய் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இரத்தினபுரி மோப்ப நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்தது என்றும், மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியார் ஒருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US