அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி சென்று சித்திரவதை செய்யப்பட்டுள்ள ஆப்கான் தூதுவரின் மகள்
பாக்கிஸ்தானிற்கான ஆப்கான் தூதுவரின் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று பின்னர் காயங்களுடன் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கான் தூதுவர் நஜீப் அலிகில்லின் 26 வயதான மகள் சிசிலா அலிகில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றதாக ஆப்கான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,ஆப்கான் தூதரக பணியாளர்கள், இராஜதந்திரிகளிற்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam