அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி சென்று சித்திரவதை செய்யப்பட்டுள்ள ஆப்கான் தூதுவரின் மகள்
பாக்கிஸ்தானிற்கான ஆப்கான் தூதுவரின் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று பின்னர் காயங்களுடன் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கான் தூதுவர் நஜீப் அலிகில்லின் 26 வயதான மகள் சிசிலா அலிகில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றதாக ஆப்கான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,ஆப்கான் தூதரக பணியாளர்கள், இராஜதந்திரிகளிற்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
