இரவு வேளைகளில் சூழும் இருள்! அச்சத்தில் கொழும்பு மக்கள்
பாணந்துறை புதிய பாலம் தொடக்கம் மொரட்டுவை வரையிலான ஆறு கிலோமீற்றர் பிரதேசம் இரவு வேளையில் இருளில் மூழ்கியுள்ளதால், மக்கள் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு மின்வெட்டு காலத்தில் குறித்த பகுதியில் இருந்த மின்விளக்குகள் சேதமடைந்திருந்ததால் அகற்றப்பட்டிருந்தன.
இதனால், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி சாலையின் இருபுறமும் உள்ள வியாபாரிகள், பயணிகள் மற்றும் மக்கள் ஆகியோர் துன்பப்படுகின்றனர்.
வீதி விபத்துக்கள்
அத்துடன், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் இரவு நேரங்களிலும் அதிகளவான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதேவேளை, மோதர, எகொட உயன, கட்டுகுருந்த, கோரல்வெல்ல, மொரட்டுவெல்ல போன்ற பிரதேசங்களிலும் சரியான மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்விளக்குகளை மறுசீரமைக்க ஒதுக்கீடு செய்யப்படாததால் தாமதம் ஏற்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பி.எம். திரு.சூரியபண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam