உருவாகும் அபாயகரமான சூழல்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
உரிய கண்காணிப்பின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையின் ஊடாக, நாடு மீண்டும் அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகரும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாகச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தனிமைப்படுத்தல் உரிய வகையில் கண்காணிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மத்திய நேர செய்திகளின் தொகுப்பு,