இலங்கையின் சரிவான மனித உரிமைகள் நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு
கடந்த 18 மாதங்களில் இலங்கையின் சரிவான மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை ஊக்குவிப்பது குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், ஃபேபியன் சால்வியோலி, நேற்று பேரவையில் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் இலங்கை, மனித உரிமைகள் சூழ்நிலையில் ஆழமான சரிவைக் கண்டுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை தேடுவது தொடர்பாக போதிய முன்னேற்றம் இல்லை என்றும், பொறுப்புக்கூறல், மற்றும் திரும்பப் பெறாத உத்தரவாதங்கள் ஆகிய துறைகளில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலைமாற்ற நீதி செயல்முறைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் விசமத் திட்டம்! பச்லட் அம்மையாருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஐ.நாவை கருத்தில் எடுக்காத இலங்கை! அடுத்தாண்டுகளின் திட்டம் - பேராசிரியர் போல் நியூமன்
ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உலகத் தலைவர்ளுடன் கோட்டாபய முக்கிய பேச்சு!