ஐ.நாவை கருத்தில் எடுக்காத இலங்கை! அடுத்தாண்டுகளின் திட்டம் - பேராசிரியர் போல் நியூமன்
ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என பெங்களூர் பல்கலைக்கழகத்தினுடைய மனித உரிமைகள் தொடர்பிலான பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.
48வது கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் தீர்மானம் மிக்கதாக இல்லாத சூழ்நிலையிலும் இந்த கூட்டத்தொடரில் ஆணையாளரினுடைய அறிக்கையினை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள் என ஊடறுப்பு நிகழ்ச்சியில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் எமது நாட்டுக்கு வர முடியாது, வரவும் கூடாது. மனித உரிமை ஆணையகத்துக்கு அழுத்தம் கொடுக்க எந்த உரிமையும் இல்ல என தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகின்றது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருக்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.