டேன் பிரியசாத் கொலை விவகாரம்: துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர் நேற்று (02.05.2025) கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இன்றையதினம் (3) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவல் உத்தரவு
விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையுடன், சந்தேக நபருக்கு குற்றத்தில் உள்ள தொடர்பைக் குறிக்கும் விரிவான அறிக்கையையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதன்படி, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
