சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு
கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை (Cyril Gamini Fernando) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (Criminal Investigation Department) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறித்த விசாரணையானது எதிர்வரும் 2024 ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குற்றப் புலனாய்வு விசாரணை
சிங்கள மொழியில் வெளிவரும் கத்தோலிக்க வார இதழான ஞானார்த்த பிரதீப்யாவின் ஆசிரியருமாக செயல்படும் தமக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில விபரங்கள் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால், தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதா அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
அருட் தந்தை பெர்னாண்டோ கடந்த 2021 நவம்பர் 3 முதல் 8 வரை குற்றப் புலனாய்வு துறையினால் அழைக்கப்பட்டார்.
எனினும் அப்போது அவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
