தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்: இந்திய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

India Mandous Cyclone
By Renuka Jun 15, 2023 06:03 AM GMT
Report

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், இந்தியவாவின் குஜராத் மாநிலத்தில் இன்றைய தினம் (15.06.2023) மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பிபர்ஜாய்' எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11ஆம் திகதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்றைய தினம் மாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே புயல் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்: இந்திய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Biparjoy Makes Landfall In Gujarat

குறிப்பாக அங்கு வசித்து வரும் மக்களை வெளியேற்றும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றைய தினம் (14.06.2023) மாலை வரை 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதில் கட்ச் மாவட்டத்தில் இருந்து மட்டுமே 18 ஆயிரம் பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 

இதைப்போல ஜூனாகத், ஜாம்நகர், போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, மோர்பி, ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பெரும் படையே களமிறக்கப்பட்டு உள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்: இந்திய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Biparjoy Makes Landfall In Gujarat

தயார் நிலையில் இந்திய முப்படைகள் 

குறிப்பாகத் தேசிய பேரிடர் மீட்புப்பணியைச் சேர்ந்த 15 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப்பணியைச் சேர்ந்த 12 குழுக்கள் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதைப்போல புயல் சேதங்களை உடனடியாக சீரமைப்பதற்காக மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையைச் சேர்ந்த 115 குழுக்கள், மாநில மின்சாரத்துறையை சேர்ந்த 397 குழுக்கள் என நிவாரணக்குழுக்களும் களமிறக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்: இந்திய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Biparjoy Makes Landfall In Gujarat

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் பூபேந்திர படேல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேற்றைய தினம் (14.06.2023) ஆய்வு செய்துள்ளார்.

இது தொடர்பாக முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், புயல் மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்: இந்திய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Biparjoy Makes Landfall In Gujarat

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'முப்படை தளபதிகளுடன் பேசி, பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள ஆயுதப்படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தேன். புயலால் நேரிடும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதில் அரசுக்கு உதவ ஆயுதப்படைகள் தயாராக உள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.

பிபர்ஜாய் புயல் இன்றைய தினம் கரையைக் கடப்பதால் அந்த வழியாகச் செல்லும் 69 தொடருந்துகள் ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


பலத்த காற்றுடன் மழை

இதற்கிடையே பிபர்ஜாய் புயலின் தாக்கத்தால் குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பிராந்தியத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

நேற்றைய தினம் காலையுடன் முடிவடைந்த முந்தைய 24 மணி நேரத்தில் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் அதிகபட்சமாக 121 மி.மீ., துவாரகாவில் 92 மி.மீ., கல்யாண்பூரில் 70 மி.மீ. மழைப் பதிவாகி இருந்தது.

இதைப்போல ஜம்நகர், ஜூனாகத், ராஜ்கோட், போர்பந்தர் மற்றும் கட்ச் மாவட்டங்களும் 50 மி.மீ.க்கு அதிகமான மழையைப் பெற்றிருந்ததாக இந்தி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US