இந்தியத் துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா கையளித்த 12 அம்சக் கோரிக்கை
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, மலையக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன் சார்ந்த 12 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
குடியுரிமை வசதிகள்: ஆவணச் சிக்கல் உள்ள மலையக மக்கள் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) பெற சிறப்புத் தளர்வுகளை வழங்குதல்.
வீட்டுத் திட்டம்: தற்போதுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தை 2 லட்சம் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துதல்.
அளிக்கப்பட்ட உறுதிப்பாடு
பொருளாதார மேம்பாடு: மலையகத்தில் இந்திய முதலீட்டில் ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் குறைந்த விலை மருந்து உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல்.

கல்வி மற்றும் சுகாதாரம்: மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை உயர்த்துதல் மற்றும் 'ஆயுஷ்மான் பாரத்' போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
அகதிகள் நலன்: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குதல் அல்லது நாடு திரும்புவோருக்கு மறுவாழ்வு அளித்தல்.
சாஸ்திரி ஒப்பந்தம்: இவ்வொப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்பிய, தமிழகம் மற்றும் கேரளாவில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதி செய்து தருதல்.
தொழில்நுட்பம்: விவசாயத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கிராமப்புறங்களில் ஐடி மையங்களை அமைத்தல்.
இந்தக் கோரிக்கைகள் மூலம் மலையக மற்றும் வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கௌரவம் உறுதிப்படுத்தப்படும் என செந்தில் தொண்டமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 4 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan