அவர் வருவாரா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பது சரியாக தெரியாது, அவர் வெளியில் வரும் வரைக்கும் அது தெரியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என பழ நெடுமாறன் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களினுடைய மனதில் நிறைந்திருக்கின்றார்
அவர் எங்களுடைய மனதில் இருக்கின்றார் என நான் முன்னரும் கூறி இருக்கின்றேன். எந்த ஒரு விடுதலை வீரனும் மக்களினுடைய மனதில் நிறைந்திருக்கின்றார்.
அதேபோன்று தான் சுபாஷ் சந்திர போஸ் இருக்கின்றார் இவரும் இருக்கின்றார்.
அவர்
வருவாரோ இல்லையோ என்பதை நாங்கள் இருந்துதான் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.