யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சமகால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளக்கி கொள்ளுதல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று சனிக்கிழமை(27) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.
வல்லமை சமூக மாற்றத்திற்கான போடராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டத்தரணி சுவஸ்திகா, சட்டத்தரணி இளங்கோவன் மற்றும் வல்லமை அமைப்பு பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தற்கால பொருளாதார நெருக்கடி
அதேவேளை, சட்டத்தரணி சுவஸ்திகா தனது உரையில் தற்கால பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |