எந்தவொரு சமயத்திலும் நாடு முடக்கப்படலாம்! வெளியானது அறிவிப்பு
பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில்,
நாடு முடக்கப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை முடக்காமல் பயணத்தடைகளை மாத்திரம் அமுல்படுத்தும் யோசனையை சுகாதார பிரிவு முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் விதமாக இவ்வாறு பயணத்தடை அல்லது முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகின்றது.
சமீபத்தில் ஒமிக்ரோன் திரிபுடன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த பொது முடக்கம் இருக்குமென கருதப்படுகிறது.
-தமிழன்-