ஊரடங்கு தளர்வின் பின்னரான கட்டுப்பாடுகள் - சுற்று நிரூபம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னரான கட்டுப்பாடுகள் குறித்த சுற்று நிரூபம் தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமே இம்முறையும் வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகிய இரு செயற்பாடுகளின் காரணமாகவே தற்போது கோவிட் தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.
எனவே தான் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் கோவிட் பரவலைத் தடுக்க முடியாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் சுமத்த முடியாது. அதேவேளை நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்படுவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவை.
அதனைக் கருத்திற் கொண்டு நாட்டை முடிந்தளவிற்கு விரைவாக திறப்பதே தற்போதைய தேவையாகவுள்ளது என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை! தொடருந்துகளும் இயங்காது

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
