சாரதியின் கவனயீனத்தால் நடு வீதியில் தவித்த பொதுமக்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று எரிபொருள் இன்மையால் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு பதினைந்துக்கு புறப்பட்ட பேருந்து இன்றிரவு (30.1.2024) 8.10 மணியளவில் ஹொரவ்பொத்தானை யான்ஓயா பகுதியில் எரிபொருள் இன்மையால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வீணடிக்கப்பட்ட நேரம்
இந்நிலையில் குறித்த பேருந்து எரிபொருள் இல்லாமையினால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் வேறு பேருந்து ஏதும் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகின்றனர்.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தை செலுத்தும் முன்னரே முன்னாயத்தங்கள் செய்திருக்க வேண்டும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனையடுத்து சுமார் இரண்டரை மணித்தியாலத்தின் பின் எரிபொருள் கொண்டுவரப்பட்டு பின் பேருந்து செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
