மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளிக் குளத்தில் முதலைகள் அதிகளவு நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் முற்றாக நீர் நிரம்பியுள்ள நிலையில், குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அந்தக் குளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள வெல்லாவெளி குளத்தில் மாத்திரம் பல முதலைகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து இவ்வாறு குளத்திற்கு முதலைகள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
குறித்த குளம் மக்கள் குடியிருப்பையும் அண்மித்துள்ளதனால் பொதுமக்களும், அப்பகுதியில் இரவு வேளைகளில் பயணம் செய்யும் பிரயாணிகளும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
