இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் குறித்து விமர்சனம்
இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வரும் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடக்கு மாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் தனது கடற்றொழில் வாடியில் வைத்து நேற்று (20.12.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்த போது, எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார்.
தண்டனைகள்
எமது கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறு காரணமாக சென்றதற்கு மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும், கடூழிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இலங்கையில் இறைமையுள்ள எமது கடற்பரப்பிற்குள் கடற்றொழிலில் ஈடுபடும் இந்தியர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
