யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்
அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம்(20.12.2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவராக உள்ளார்.
இவர்கள் கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பில் கடந்த கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்தனர்.
புதிய அரசாங்கத்தின் முயற்சி
இதன் பின்னர், இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தனர்.
அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் நேற்று விடுக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
