தொல்பொருள் திணைக்களத்தினரால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

Sri Lanka Sri Lankan Peoples Rice Kathiravelu Shanmugam Kugathasan
By Rukshy Jan 09, 2025 11:19 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வுக்கு இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களில் தொல்பொருள் துறையும் முக்கிய காரணமாக உள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது

சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது

 நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பு

மேலும் தெரிவிக்கையில். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.

எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தினரால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Rice Production Department Of Archaeology

அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இதனை விடவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரபுஅடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, ஜாயா நகர், கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரியகுளம் முதலிய கிராமசேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டு பிடித்து வைத்துள்ளது.

இந்த செயலானது, நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும், இது நாட்டிற்கு பேரிழப்பு என்பதனையும், இந்த அவையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட..

இதற்கு மேலாக, இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. 

தொல்பொருள் திணைக்களத்தினரால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Rice Production Department Of Archaeology

இது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன.

ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி தொல்பொருள் துறை,வனத்துறை வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை, புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அதன் வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் - சஜித் தரப்பை இணைக்கும் பாலமாக விளங்கும் முக்கியஸ்தர்

ரணில் - சஜித் தரப்பை இணைக்கும் பாலமாக விளங்கும் முக்கியஸ்தர்

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாதவை ! திலித் ஜயவீர

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாதவை ! திலித் ஜயவீர


மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US