இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பதுளை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எல்ல நகரில் பொதுக் மலசலகூடம், குடிநீர்க் குழாய் அமைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

முறையான கழிவுநீர் அமைப்பு இல்லாத காரணத்தால், வடிகாலில் வியாபாரிகளை கழிவுகளை விடுவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அது மிகவும் மோசமான நிலையில் உள்ளதென தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கழிப்பறையின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam