கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று (25.03.23) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சந்தேகநபரை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணியின் ஊடாக இன்று முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அதனை அவர் கொண்டுச்சென்றிருந்தார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஒருவரின் கையை வெட்டியிருந்ததோடு, அவரது கையை வைத்தியர்கள் ஒன்றுசேர்த்திருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு வெட்டப்பட்ட கையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam
