கலஹபிடிய பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை: சந்தேகநபர் தப்பியோட்டம்
தனிப்பட்ட தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் கலஹபிடிய பிரதேசத்தில் நேற்று(9) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட மோதல்
இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான குறித்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri