கலஹபிடிய பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை: சந்தேகநபர் தப்பியோட்டம்
தனிப்பட்ட தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் கலஹபிடிய பிரதேசத்தில் நேற்று(9) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட மோதல்
இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான குறித்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri