சிறுவனை கொடூரமாக வெட்டிய நபர்: பொலிஸார் மீதும் தாக்குதல்-குற்றப் பார்வை
இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அந்தவகையில், கடந்த வியாழக்கிழமை கத்தி ஒன்றால் வெட்டி 7 வயது குழந்தையை கடுமையாக காயப்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் பொலிஸார் மீதும் பிரதேசவாசிகள் மீதும் கற்களை வீசித் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவர் கல்லில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தை பலத்த வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 7 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளது.
குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இவ்வார குற்றப் பார்வை நிகழ்ச்சி,



