முல்லைத்தீவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய வீர வீராங்கனைகள் கௌரவிப்பு
கிரிகெட் விளையாட்டில் 2024ஆம் ஆண்டு வெற்றியாளர்கள், சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(30.05.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றிருந்தது.
கடந்த வருடம் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றியாளர்கள், சாதனையாளர்களான முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அமைந்துள்ள உதயா தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
2024ஆம் ஆண்டு துடுப்பாட்ட போட்டியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்கள், சிறந்த பந்து வீச்சு , சிறந்த துடுப்பாட்டம், ஆண்டுக்கான சிறந்த வீரர், மாகாண ரீதியில் சிறந்து விளங்கிய வீர வீராங்கனைகள், சிறந்த பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிய வீரர்கள் போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
பலரும் கலந்து கொண்ட நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கற்கண்டு உதயசீலன் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி முகுந்தன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் துடுப்பாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











