கோவிட் தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்
கோவிட் தாக்கத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த பெண்ணின் உடல் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் இன்று (14.05) தகனம் செய்யப்பட்டது.
வவுனியா, சமனங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெற்கிலுப்பைகுளம் பகுதியில் வசிக்கும் 77 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்று (13.05) மதியம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கோவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (14.05) மதியம் மரணமடைந்தார். மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு இரவு 7.00 மணியளவில் வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.









