மட்டக்களப்பில் மாடுகள் களவாடப்படும் அவல நிலை
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த பசுவும் கன்றுக் குட்டியும் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.
களவாடியவர்கள் அதனை பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதுடன் அதன் மீதிப்பகுதியினை அப்பகுதியில் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இந்நிலையில், இவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
போரதீவுப்பற்று பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு வருவதாகவும் இவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
