கொவிஷீல்ட் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகளில் ஒன்றாகும்! - ரமேஷ் பத்திரண
கொவிஷீல்ட் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகளில் ஒன்றாகும்” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசென்கா கொவிஷீல்ட் தடுப்பூசி உலகில் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகள் ஒன்று என உலக சுகாதார ஸ்தாபனமும் இதனை பரிந்துரை செய்துள்ளது.
தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு பாரியளவில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில் 2 வீதமானவர்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் ஏனைய சில நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு. இது வழமையானது.
இன்று காலை வரையில் சுமார் 100000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
